Home, Safety, Theft
இரவு நேரங்களில் வீட்டிற்கு முன் ஒரு சிறிய விளக்காவது எரியவிடவேண்டும்.
இரவு நேரங்களில் வீட்டிற்கு முன் ஒரு சிறிய விளக்காவது எரியவிடவேண்டும். ஆனால் இதை பலர் செய்யாத்தற்கு காரணம் விளக்கு தொடர்ந்து எரிவதால் அதிக அளவிலான மின்சார பில் வந்துவிடும் என்று நினைப்பதாகும்.
.
மின்சார சாதனங்களின் மின் உபயோகம் எப்படி கணக்கிடப்படுகின்றது என பார்ப்போம்.
மின் சாதனத்தின் வாட்ஸ்ன் அளவை அது உபயோகப்ப்படுத்தப்படும் காலத்தால் (மணி) பெருக்கி வரும் விடையை 1000-த்தால் வகுத்தால் வருவதுதான் 1 யுனிட் ஆகும்.
.
அதன்படி வாசலில் 25 வாட்ஸ் பல்ப் மாலை 6 மணியில் இருந்து காலை 6 மணி வரை எரிந்தால்,
25 x 12 = 300 W
300 x 60 நாட்கள் = 18000
18000 யை 1000த்தால் வகுத்தால், 18 யுனிட்.
ஆக, இரண்டு மாத்த்திற்கு 18 யுனிட் செலவாகும். ஒரு யுனிட்டிற்கு
ரூ.2.50 வைத்து கொண்டால், ரூ.45 இரண்டு மாத பில்லில் கூட வரும்.
.
நமது வீட்டின் பாதுகாப்பிற்காக இரண்டு மாத்த்திற்கு ஒரு முறை ரூ.45 செலவழிக்கலாமே.
Likes (
3 )
comments (
3 )
2023-07-21 18:35:30
Nice
2023-07-21 19:05:20new comment
2023-07-21 19:05:16good
2023-07-21 19:04:30